~

சாவோசியன் - 'அதிர்ஷ்டம் வரும் வரை காத்திருப்போம்' (ஸ்ரீ சீனா கதை)

(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 22 பிற்பகல் 01 .15) 2020 அக்டோபர் 22ம் திகதி இரவு இலங்கையில் இரட்டை குடியுரிமை தொடர்பான சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உள்ள சாவோசியனின் மகிழ்ச்சி வானத்தை எட்டி உள்ளது. அம்மா தனக்கு பெயர் வைக்கும் போது எதிர்காலத்தை தெரிந்து வைத்திருந்தார் என்ற சந்தேகம் எழுந்தது. 'சாவோசியன்' (Chaoxiang) என்பதன் அர்த்தம் 'அதிர்ஷ்டம் வரும் வரை காத்திருப்போம்' என்பதாகும். 

சாவோசியன் தற்போது சீனாவின் செங்காய் நகரத்திலிருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இரண்டு வருடங்கள் பயிற்சி பெற்று வருகிறார். இலங்கையில் உள்ள சீன நாட்டுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் சீன மக்களின் பிரதான நிறைவேற்று அதிகாரி என்று கூறப்படும் CEO in Sri Lanka  என முதல் தடவையாக பயிற்சி பெறுகிறார். சிங்கள தமிழ் மொழி பயிற்சி சிங்கள தமிழ் பாடல் பாடும் பயிற்சி சிங்கள தமிழ் கெட்ட வார்த்தைகள் பேசும் பயிற்சி உள்ளிட்ட சுமார் 100 உள்ளடக்கங்களை கொண்ட இரண்டு வருட பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும். 

இலங்கைக்கு சென்றதன் பின்னர் இலங்கை குடியுரிமை கிடைக்கும். இலங்கையில் உள்ள சீன இடங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் தங்கியிருப்பதற்காக செல்லும் சீன நபர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை இலகுவாக கிடைக்கும். இலங்கைக்கு செல்லும் பயணத்தை நினைத்துக் கொண்டே கட்டிலில் புரண்டு கொண்டிருந்த சாவோசினுக்கு தன்னை அறியாமலே தூக்கம் வந்தது. 

------------------------------

2022 ஆம் ஆண்டு ஒரு நாள் சாவோசியன் கொழும்பில் உள்ள சீன நகரத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் CEO in Sri Lanka என்ற பதவியில் கடமைகளை பொறுப்பேற்க வந்தார். அப்போது சாவோசியனுக்கு 35 வயது இருக்கும். 178 ஏக்கர் பரப்பளவு கொண்ட இலங்கை துறைமுகத்தில் 116 ஏக்கர் நிலப்பரப்பு சீன துறைமுக நகர் என சொல்லப்படுவது ஏன்? அது கொழும்பு சீன நகர் ஆகும். கடமைகளை பொறுப்பேற்க வந்த சாவோசியனை வரவேற்பதற்கு சீன நகரத்தின் சீன பொலிஸ் பிரிவின் சீன பிரதி பொலிஸ் மா அதிபர் சுன் தாவூ வருகை தந்து சாவோசியனுக்கு செலியூட் அடித்தார். 

'சார் இன்றே அம்பாந்தோட்டை செல்கிறீர்களா? அல்லது நாளை செல்கிறீர்களா? என சீன பிரதி பொலிஸ் மா அதிபர் சுன் தாவூ கேட்டார். 

'நாளை செல்கிறேன். அங்குள்ள செயற்பாடுகள் எவ்வாறு? 

'அங்கு கொழும்பு போன்று இல்லை சார். 15000 ஏக்கர் நிலப் பரப்பும் மிகப் பெரிய துறைமுகமும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மேலும் பல அம்சங்களும் உள்ளன. நான் நினைக்கிறேன் அதிகளவு அங்குள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலேயே நீங்கள் இருக்க வேண்டி வரும். எனினும் அம்பாந்தோட்டையில் 50000 சீன போலீசாரும் 75,000 சீன கடற்படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. ' என சுன் தாவூ பேசிக்கொண்டே சென்றார். 

'எதற்கு பயப்பட வேண்டும்? கொழும்பு துறைமுகத்தில் மூன்றில் இரண்டு பங்கு நம்முடையது. அம்பாந்தோட்டை முழுவதும் நம்முடையது. காலி மற்றும் திருகோணமலை துறைமுகம் இரண்டையும் அடுத்த மாதத்தில் நமக்கே விற்பனை செய்வர். இந்திய காரர்களுக்கு வேண்டுமானால் அந்த சிறிய காங்கேசன்துறை துறைமுகத்தை வைத்துக் கொள்ள சொல்லவும்' என சாவோசியன் தனது பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பதில் அளித்தார். 

அதன் போது சாவோசியனை சந்திப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர் ஒருவர் வருகை தந்தார். அவர் ஜனாதிபதியின் செய்தி ஒன்றை கொண்டு வந்திருந்தார். அதில் அபூர்வமான யோசனை முன் வைக்கப்பட்டிருந்தது. சாவோசினுக்கு இலங்கை குடியுரிமை கிடைத்ததன் பின்னர் அவருடைய பெயருக்கு முன்னால் 'ராஜசிங்க' என்ற பெயரை இணைத்துக் கொள்ளுமாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

'சாவோசியன் ராஜசிங்க' .. மம். .. கெட்டது இல்லை. 

எனினும் இது குறித்து தனது தாயிடம் அனுமதி பெற வேண்டும் என கூறிய சாவோசினுக்கு தாயின் அனுமதியும் கிடைத்தது.  இலங்கையின் இறுதி மன்னரது பெயரில் ஒரு பகுதியும் தனது மகனுக்கு கிடைத்ததை நினைத்து குறித்த தாய் பெருமை அடைந்தார்.  

------------------------------

அன்றிலிருந்து சுமார் ஒரு வருட காலங்களுக்கு சாவோசியன் ராஜசிங்க அதிக வேலைப்பளு காரணமாக கலைப்படைந்தார். இலங்கையின் தொலைக்காட்சி ஊடகங்கள் அதிக காலத்தை அவரிடம் பெற்றுக் கொண்டன. சிங்கள தமிழ் மொழிகளில் பாடல் பாடுமாறு தொலைக்காட்சி ஊடகங்கள் அதிகமாக கேட்டதனால் அவர் அதிகம் ஸ்டூடியோவில் இருந்தார். இறுதியில் கொழும்பு சீன நகரத்தில் புதிதாக ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்து தனது நேரத்தை முகாமைத்துவம் செய்து கொள்ள நடவடிக்கை எடுத்தார். இலங்கையில் சிங்கள மொழியை தவறாக உச்சரித்து பாடல் பாடுவதை இலங்கை மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பதை சாவோசியன் பிறகு அறிந்து கொண்டார். முகைதீன் பேக் ஜிக்கி இன்னும் பிரபல பாடகராக இருப்பதற்கான காரணம் என்ன என்பதை சங்கீத வித்துவான் ரோஹன ரணவீர சாவோசியன் ராஜசிங்கவிற்கு எடுத்துக் கூறினார். அதுவரை காலமும் அழகாக சிங்கள உச்சரிப்பு செய்து பாடல் பாடி வந்த சாவோசியன் சீன மொழிக்கு இணங்க சிங்கள மொழியை உச்சரித்து பாடல் பாட தொடங்கினார். சில மாதங்கள் செல்வதற்கு முன்னரே இலங்கையில் பிரபல நட்சத்திரமாக அவர் மாறினார். 2023 ஆம் ஆண்டு ஆகும் போது சாவோசியன் இலங்கை மக்களுக்கு டேன் பிரியசாத் போன்று நன்கு பழக்கப்பட்டார். 

2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் போட்டியிடுவதற்கான வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவென ஜனவரி மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சாவோசியனுக்கு இரவு விருந்து அளித்து அழைப்பு விடுத்தார். இந்த இராப்போசன விருந்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் சாவோசியனும் மாத்திரமே கலந்து கொண்டனர். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் சாவோசியனுக்கு அபூர்வமான யோசனை ஒன்றை முன்வைத்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதானால் தேர்தல் முடிந்த பின்னர் சாவோசியன் ராஜசிங்கவை தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிரதமர் பதவியை வழங்குவதாக கோட்டாபய ராஜபக்ஷ யோசனையை முன்வைத்தார். 

'இப்போது சமல் சகோதரரின் நினைப்பே இல்லை. மஹிந்த சகோதரர் மறைந்து ஒரு வருட தானமும் வழங்கி முடிந்து விட்டது. பஸ்ஸில் கோபம் கொண்டு அமெரிக்கா சென்று ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன. நாமல் பைத்தியக்காரன். அதனால் சீன சொத்துக்களை பெற்று அபிவிருத்தி செய்தது போன்று இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளையும் பெற்று அபிவிருத்தி செய்து தருவது சிறந்தது என கோட்டாபய ராஜபக்ஷ சாவோசேனுக்கு யோசனை முன்வைத்தார். அதனால் தான் பிரதமர் பதவியை வழங்க தீர்மானித்ததாகவும் கூறினார். அத்துடன் சாவோசியம் ராஜசிங்க இன்று இலங்கை முழுவதும் பிரபலமாக பேசப்படுகிறார். அதனால் அவருக்கு இலங்கை மக்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். என்ன சொல்கிறீர்கள்..? சிரித்துக் கொண்டே கோட்டாபய ராஜபக்ச சாவோசினின் பதிலுக்காக எதிர்பார்த்து அவரது சிறிய கண்களை பார்த்துக் கொண்டிருந்தார். 

2020 ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இரவு இலங்கையில் இரட்டை பிரஜா உரிமை தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் போது சீனாவில் ஷாங்காய் நகரத்தில் சிறிய அறை ஒன்றுக்குள் கட்டிலில் புரண்டு நினைத்துக் கொண்டிருந்த விடயம் சாவோசினுக்கு தற்போது நிதர்சனமாக அருகில் வந்துள்ளது.  'அதிர்ஷ்டம் வரும் வரை காத்திருக்க வேண்டும்' என்ற பொருள் கொண்ட 'சாவோசியம்' என்ற பெயரை தனது தாய் தெரிந்து கொண்டுதான் தனக்கு வைத்தாரோ என்ற நினைப்பு அவருக்கு வந்தது. அத்துடன் தனக்காக கோட்டாபய ராஜபக்ச இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார் என்ற எண்ணமும் சாவோசியனுக்கு வந்தது. 

'ஓகே மிஸ்டர் கோட்டாபய ராஜபக்ச' என சாவோசியன் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். 

-சந்தருவான்-

---------------------------
by     (2020-10-23 17:36:50)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links