~

"இரும்பு பூட்டிய வீட்டில் பருத்தி எங்கே ?" பொருத்தமற்ற தகுதியற்ற இரண்டு கைக்கூலி மச்சான்களுடன் வெறுங்கையுடன் விளையாடும் சட்ட மா அதிபர்..!

-எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021. அக் . 03, முற்பகல் 9.30) "இரும்பு வீட்டில் இம்புல் பருத்தி எங்கே?" என்று ஒரு சிங்கள வாசகம் உள்ளது. இதன் பொருள் பெரும் அழிவு நடந்த இடத்தில், சிறிய விடயங்கள் விடப்படும் என்பதாகும். 

20 வது திருத்தம் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு அழிவை ஏற்படுத்திய பின்னர் சட்ட மா அதிபர் திணைக்களமும் பழுதடைந்துள்ளது.

இன்று, சட்டமா அதிபர் திணைக்களம் சட்டத்தால் ஆட்சி செய்யும் குண்டர்களுக்கு புகலிடமாக உள்ளது. இந்த நிலை மக்களால் ஏற்பட்ட ஒன்று அல்ல. மாறாக ஊழல் ஆட்சியாளர்களால் ஏற்பட்டதாகும். 

பதில் சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு தகுதியற்ற கைக்கூலி..

லங்கா ஈ நியூஸ் உள்ளக தகவல் சேவைக்கு வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் சட்ட மா அதிபரின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு தகுதியற்ற கைக்கூலி உதவியாளர் ஒருவரை  நியமிப்பதில் பல தரப்பினரின் ஈடுபாட்டால் சட்டத்தை சட்டவிரோதமாக்கும் தீய செயல்முறை இடம்பெற்றதாக தெரிய வருகிறது.

சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு 10 பிரதி சொலிசிட்டர் ஜெனரல்கள் தேவை. ஆனால் இப்போது ஒருவர் மட்டுமே உள்ளாார்.  மீதம் உள்ள 9 இடங்கள் வெற்றிடமாக உள்ளன. ஆட்சியாளர்கள் தங்களுக்குத் தேவையான உதவியாளர்களை திடீரென்று கண்டுபிடிப்பது கடினம் என்பதால் அவை இன்னமும் சரியாக நிரப்பப்படவில்லை. இப்போது ஒரு வெற்றிடத்தை நிரப்ப ஒரு உதவியாளர் கண்டுபிடிக்கப்பட்டார். அவருடைய பெயர் கனிஷ்கா டி சில்வா. இவர் ஒரு இளம் பெண் சட்ட அதிகாரி ஆவார். 

கனிஷ்கா டி சில்வாவின் தந்தை யார் ?

 கனிஷ்கா டி சில்வா, முன்னாள் தலைமை நீதிபதி அசோக டி சில்வாவின் மகள் ஆவார், அசோக டி சில்வா ராஜபக்சேவுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசுவதில் வெட்கம் இல்லாதவர். அசோக டி சில்வாவின் கேடுகெட்ட குணத்தை பற்றி லங்கா ஈ நியூஸ் வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது. இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்  லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில்்   அவரது மகள் அகிம்சா விக்ரமதுங்க அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த போது அதில் கோட்டாபய ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஆஜராகிய நபர் அசோக டி சில்வா ஆவார். இலங்கை நீதி வரலாற்றில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஓய்வு பெற்ற பிறகு ஒரு பிரதம நீதியரசர் மற்றும் ஒரு நபருக்காக ஆஜரானது இதுவே முதல் முறைையாகும். மறு பக்கம்  நாட்டின் அரசியலமைப்பை மீறிி அவர்  அவ்வாறு செய்துள்ளார். 

இலங்கை அரசியல் அமைப்பின் பிரிவு 110 (3) கூறுவது படி, “ உச்ச நீதிமன்ற நீதிபதியாக அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக நிரந்தர பதவி வகித்த எவரும் ஜனாதிபதியின் எழுத்துப் பூர்வ அனுமதிி இன்றி உயர் நீதிமன்றம், மேன் முறையீட்டு நீதிமன்றத்திலும் அல்லது நிறுவனத்திலும் வழக்கறிஞராக அல்லது சாட்சியாளராக ஆஜராகாது இருக்க வேண்டும். " என்று உள்ளது. 

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு அத்தகைய எழுத்துப்பூர்வ ஒப்புதலை வழங்கவில்லை. அசோகா டி சில்வா கலிபோர்னியாவில் கோத்தபாய ராஜபக்சே சார்பாக வழக்கறிஞராக ஆடை இல்லாமல் கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஆஜராகியதாக விளக்கம் தரலாம். ஆனால் மேற்கண்ட உட்பிரிவில் உள்ள 'எதுவாக இருந்தாலும்' என்ற இரண்டு வார்த்தைகள் நாய்க்கு விடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. எவ்வாறாயினும், இலங்கையின் உச்ச சட்டத்தை மீறியதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதன் பிறகு ஜனாதிபதியாக கோட்டாபய நியமிக்கப்பட்டதால் இலங்கை நீதிமன்றத்தில் இதுபோன்ற ஒன்று நடப்பது கனவாகவே இருக்கும்.

கனிஷ்கா ஒரு வழக்கறிஞர் ஆனதும் மோசடி வழியில்...

எவ்வாறாயினும், நாம் முன்னைய செய்திக்கு சென்றால் இன்று அசோக டி சில்வாவின் மகள் கனிஷ்கா டி சில்வாவை சட்டத்தை சட்டவிரோதமாக்கி சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்க முயற்சிகள் முன்னெடுத்து வரப்படுகிறது.

கனிஷ்கா டி சில்வா ஒரு வழக்கறிஞராக மாறிய விதமும் ஆச்சரியமாக இருக்கிறது. சட்டக் கல்லூரியில் சேரும் தகுதி அவளுக்கு இல்லை. அவர் என்ன செயதார் என்றால்், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வார். அந்த நேரத்தில், தந்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். தன் மகளுக்கு நன்மை செய்யும் வகையில் வழக்கை சரி செய்வார். அதன்படி, அவள் சட்டக் கல்லூரியில் நுழைய முடிந்தது. 

கனிஷ்கா டி சில்வா இன்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு தகுதி அற்றவர் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக மாற குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சேவை செய்திருக்க வேண்டும். ஆனால் கனிஷ்கா டி சில்வா வெறும் 3 வருடங்கள் மாத்திரம் சேவை செய்துள்ளார். 

திருடனின் தாய் அன்றி ஹரியின் மாமனார் ஆடிய ஆட்டம்...

எப்படியோ ஒரு கை கூலியை இந்த பதவிக்கு நியமித்துக் கொள்ளவென மூன்றை  ஏழாக மாற்ற ஒரு விளையாட்டையும் விளையாடியுள்ளனர். 

அத்தகைய அரச பதவிக்கு சட்டப்பூர்வ நியமனங்கள் செய்ய பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதி தேவை. அங்கு, அனைத்து தகுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆணைக்குழு ஆராயும். மேற்கூறிய பொது சேவை ஆணைக்குழு கனிஷ்கா டி சில்வாவின் மூன்றை ஏழாக மாற்ற ஒரு விளையாட்டை விளையாடியுள்ளது. திருடனின் தாய் அல்ல மாறாக ஹரியின் மாமனார். அதாவது, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜகத் பாலபடபெதி, தற்போதைய பொது சேவை ஆணையத்தின் தலைவராக உள்ளார். அவர்  கனிஷ்கா டி சில்வாவின் கணவர் இசுருவின் தந்தை ஆவார். ஆக அசோக டி சில்வா மற்றும் ஜகத் பாலபடபெதி ஆகியோர் மச்சான்மார்  ஆவர். சட்டத்தை மீறாமல் தங்கள் மகள் அல்லது மருமகளுக்கு ஒரு நிலையை உருவாக்கும் தந்தையோ அல்லது மாமனாரோ இலங்கையில் இல்லை என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். 

ஹா.. ஹா ... ஹா ...

அதன்படி, அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பான விளையாட்டு ஒன்றை விளையாடி உள்ளனர். முதலில், தற்போதைய சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் அருமையான கடிதத்தை பொது சேவை ஆணையத்தின் தலைவருக்கு அனுப்புகிறார். " உடனடியாக நிரப்ப பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் பல வெற்றிடங்கள் உள்ளதால் அனுபவ காலத்தை 7 ஆண்டுகளுக்கு பதிலாக 3 வருடங்களாக குறைக்க வேண்டும் .." என்று கோரியுள்ளது. அதற்கு பதில் அனுப்பிய அரச சேவை ஆணைக்குழு தலைவரான  மாமனார் சட்ட மா அதிபருக்கு முகவரி இட்டு ஒரு கடிதம் எழுதி, " சரி, இந்த ஆண்டு மட்டும் ஆணைக்குழு 7 வருடங்களை 3 வருடங்களாக குறைக்க அனுமதிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.  ஹூ ... ஹூ ... ஹூ ... இப்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு கனிஷ்கா டி சில்வாவை நியமிப்பதற்கான அனைத்து சட்ட தடைகளும் நீக்கப்பட்டு விட்டன.

எனவே, " இரும்பு பூட்டிய வீட்டில் இம்புல் பருத்தி எங்கிருந்து வந்தது ?"

 - எழுதியது சந்திரபிரதீப்

---------------------------
by     (2021-10-03 18:48:04)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links