~

எரிபொருள் தரத்திற்கும் ஆப்பு..! பெட்ரோல் தரம் குறைப்பு..! இதோ சாட்சி..!

- அலுவலக செய்தியாளர் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி 12, பிற்பகல் 09.10 ) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல்கள் தரமற்றவை என நாடளாவிய ரீதியில் உள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

புதிய பெட்ரோலால் முன்பு ஒரு லீட்டரில் ஓடிய தூரத்தை புதிய பெட்ரோலில் ஓட முடியவில்லை என்பதே மக்களின் முக்கிய முறைப்பாடாக உள்ளது. ரன்னிங் மீட்டரை பூஜ்ஜியமாக மாற்றி முழு  டேங்க் 92 ஆக்டேன் பெட்ரோலை அவர்கள் நிரப்பி வழக்கம் போல  பயன்படுத்துவதாகவும், முன்பு 300 கி. மீ தூரத்தை கடந்த பெட்ரோல் இப்போது  270 கி . மீ தூரம் மாத்திரமே கடக்க முடியுமானதாக உள்ளதென  ஒருவர் கூறினார்.  ஒரு லீற்றர் 95 ஆக்டேன் பெட்ரோலில் 9 . 5 கி . மீ தூரம் ஓடிய தனது கார் இப்போது 7.5 கி . மீ மட்டுமே செல்லும் என்று மற்றொருவர் கூறினார்.  இந்த குற்றச்சாட்டை நாங்கள் தீவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் விசாரித்த போது தேடுதல் பார்வை கொண்ட நுகர்வோர் கருத்து முன் வைத்துள்ளனர்.  இறுதியில் அவர்கள் முன்பு ஓட்டிய தூரத்தை இயக்க சில கூடுதல் லிட்டர் எரிபொருள் தேவைப்படும் என்று கூறினர்.

இரண்டாவது புகார் என்னவென்றால், இந்த புதிய பெட்ரோலைப் பயன்படுத்திய பிறகு வாகனத்தின் ஓட்ட சக்தி குறைகிறது. "புதிய பெட்ரோல் முன்பு போல வண்டியை இழுக்காது" என்கிறார்கள்.
 
மூன்றாவது புகார், புதிய பெட்ரோல் போட்ட பிறகு வாகனம் உடனடியாக ஸ்டார்ட் ஆகவில்லை. அவர்களது காரின் பேட்டரியை சோதனை செய்ததில் பேட்டரியில் எந்த தவறும் இல்லை என தெரியவந்தது.

பெட்ரோலில் 6 முதல் 16 கார்பன் சங்கிலியுடன் மண்ணெண்ணெய் போன்ற மற்றொரு கலவையை கலப்பதால் இது நிகழ்கிறது என்று விஷயத்தை நன்கு அறிந்த ஒருவர் கூறினார். அவரது கருத்துப்படி, இந்த புதிய பெட்ரோல்களின் உண்மையான ஆக்டேன் மதிப்பு சுமார் 76% 92% 95 அல்ல.

எனினும் குறிப்பிட்ட ஒக்டேன் பெறுமதியை விட குறைவான ஆக்டேன் எரிபொருளைப் பயன்படுத்துவதால் வாகனங்களில் பல நீண்டகால குறைகள் ஏற்படுவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,  விமானங்களுக்கு தரமற்ற எரிபொருளை பயன்படுத்தியமையால் அண்மையில் சகுராய் என்ற தனியார் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு இலகுரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி பயாகல மற்றும் கட்டான பிரதேசங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது விநியோகிக்கும் 95 ஒக்டேன் பெற்றோல் நிறம் மாறியிருப்பதற்கான ஆதாரத்தை இங்குள்ள புகைப்படம் காட்டுகிறது.

- அலுவலக செய்தியாளர் 

---------------------------
by     (2022-01-12 16:42:16)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links