~

பசில் ராஜபக்சவின் ஸ்ரீ லங்கா குண்டர் கட்சி ( SLPP ) நீதிமன்றுக்கு, ஜே வி பி உள்ளிட்ட பிரதான எதிர் கட்சிகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல் ..! இந்த குப்பை அரசியலை தோல்வி அடையச் செய்ய பொதுத் தேர்தல் ஒன்றினால் மாத்திரமே முடியும்..!!

- எழுதுவது அனுபாவனந்த

( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே 29 , பிற்பகல் 12.45 ) இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள கிராமப் புற சண்டித்தன அரசியலின் ஸ்தாபகர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே. பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள், மாகாண சபைகள் என்ற மட்டத்தில் சண்டித்தன அரசியல் குண்டர்களை உருவாக்கியவர்கள் ராஜபக்சக்களே. அரசாங்க அபிவிருத்தி ஒப்பந்தங்கள் மூலம் உள்ளூர் அரசியல்வாதிகள் குறைந்த பட்சம் பத்து சதவீத " உத்தியோகபூர்வ " கமிஷன் பெற அனுமதித்து வழி காட்டியவர்கள் ராஜபக்சக்களே. இந்த அரசியல் குண்டர்களுக்கு கசிப்பு, மண், கல், மணல் கடத்துவதற்கு " அதிகாரப்பூர்வ " அனுமதி வழங்கியதும் ராஜபக்சக்கள் தான். ராஜபக்சக்கள் தங்களின் குண்டர் அரசியல் திட்டங்களுக்காக முறைகேடாக சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்தனர். இவை அனைத்தையும் பசில் ராஜபக்ச ஒருங்கிணைப்பு செய்தார். அத்தகைய குண்டர் அரசியல் வர்க்கம் பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் ஸ்ரீ. ல. சு. க. வில் ஒருபோதும் இணைந்து இருக்கவில்லை. என்னதான் குறைகள் இருந்தாலும் பண்டாரநாயக்க போன்ற  கலாசாரப் பிரமுகர்கள் இத்தகைய குண்டர் அரசியலைக் கொச்சைத்தனமாக முன்னெடுக்கவில்லை. 

இலங்கை குண்டர் கட்சியின் உதயம் ... 

பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியை ( பொஹொட்டுவ - மொட்டுக் கட்சி ) உருவாக்கிய போது, ​​அது சுமார் 2004 முதல் அவர்கள் உருவாக்கி வந்த கிராமிய குண்டர் அரசியல் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக கட்டமைப்பு செய்யப்பட்டது. உண்மையில் பசில் ராஜபஷவின் புதிய கட்சி ஸ்ரீலங்கா குண்டர் குழு கட்சி ஆகும். நாட்டில் இறுதியாக நடந்த உள்ளூராட்சி தேர்தலில் இந்த கிராமம் புற சண்டித்தன அரசியல் மூலம் வெற்றி பெற்ற பசில், கடந்த பொதுத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் குண்டர்களாக பெயர் பெற்ற பிரபல நபர்களுக்கு பொது ஜன முன்னணி  சார்பில் வேட்பு மனுக்களை வழங்கினார். சனத் நிஷாந்த, பொரலு இந்திக்க, அம்பாறை வீரசிங்க, திஸ்ஸ குட்டியாராச்சி, மிலன் ஜயதிலக்க, அஜித் ராஜபக்ஷ உட்பட டசன் கணக்கான குண்டர் அரசியல் பாமரர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். நாடாளுமன்ற அவையில் ஆபாசமான வார்த்தைகளைக் கூச்சலிடுவதைத் தவிர வேறு எந்த பயனுள்ள பங்களிப்பையும் அவர்கள் இதுவரை செய்யவில்லை. பாராளுமன்ற சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தி தமது சட்ட விரோத வர்த்தகத்தை விரிவுபடுத்துவதே அவர்களின் ஒரே நோக்கமாக உள்ளது. 

கிராம புற குண்டர் அரசியல் குழு 9 / 5 அன்று அரங்கேற்றிய தாக்குதல் ...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை முழுமையாக பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் அஹிம்சை போராட்டக்காரர்கள் மீது  9 / 5 அன்று மிகவும் மூர்க்கத்தனமாக காட்டுமிராண்டித் தனமாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ராஜபக்சக்கள் தலைமை தாங்கியதுடன் பசில் உருவாக்கிய குண்டர் அரசியல் வர்க்கம் வழி நடத்தியது. அமைதியான போராட்டத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிராக அவர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எதிர் வன்முறையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் மே 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வின் போது இந்த குண்டர்கள் சிவில் சமூகம் கொடுத்த செய்தியை புரிந்து கொள்ளத் தவறி விட்டனர் என்பது தெளிவாகியது. 

400 லட்சம் ரூபா பொது மக்கள் பணத்தை நீடித்த பாராளுமன்ற கண்காட்சி ...

அந்த நான்கு நாட்களில், ஸ்ரீ லங்கா குண்டர் கட்சியின் மிகப் பெரும்பான்மையான ராஜபக்சக்கள், நாட்டின் பிரஜைகளை ஒரு பைசாவிற்கும் கணக்கெடுக்கவில்லை என்று முழு நாட்டுக்கும் தெரிவித்தனர். தங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் வெகுஜன எதிர்ப்புகள்  பொருந்தாது என கருதினர். சுமார் நான்கு நாட்கள் பாராளுமன்றத்தை கூட்டி 400 மில்லியன் ரூபா வீண் செலவு செய்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் தமது வீடுகளுக்கு தீ வைத்து அழிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தும் மூக்கால் அழுது புலம்பினர். பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  புதிய வீடுகளை வழங்குவதே புதிய அமைச்சரவையின் முக்கிய பணி என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நான்கு நாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிர்கால பிள்ளைகளுக்கு ஏற்படும் சிரமங்கள் பாதிப்புகளை எண்ணி எவரும் கண்ணீர் வடிக்கவில்லை. 

தமது வயிறு குறித்து மாத்திரம் கதைக்கும் மோசமான சுய நல மக்கள் பிரதிநிதிகள் ...

இந்த நாட்டில் பிள்ளைகள் இருப்பது ஸ்ரீ லங்கா குண்டர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே. இந்த நாட்டில் அவர்களின் வீடுகள் மட்டுமே தீயில் எரிகின்றன. எனவே ஒரு நாடு என்ற வகையில் உடனடியாக அவர்களுக்கு ஆறுதல் கூற நடவடிக்கை எடுத்தோம். நாட்டு மக்கள் ஏன் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. காஸ் சிலிண்டர்கள் வெடித்து மக்கள் இறப்பதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வரிசையில் நின்று இறக்கும் மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. இன்று நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எதையும் சமாளிக்க முடியாமல் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். குழந்தைகள் பசியால் அவதிப்படுகின்றனர். ஆதரவற்ற நோயாளிகள் மருந்து இன்றி இறக்கின்றனர். மருந்துகள் தட்டுப்பாடு ஒரு புறம் இருக்க, சிசேரியன் தைக்கத் தேவையான தையல் மருத்துவ மனைகளில் இல்லை. மருத்துவ மனைக்குச் செல்ல எரிபொருள் இல்லாமல் நெடுஞ்சாலையில் குழந்தைகள் இறக்கின்றனர். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இறந்து விட்டனர்.

ஆனால் ஸ்ரீ லங்கா பொது ஜன குண்டர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள ஒரே பிரச்சினை அவர்கள் எதிர் நோக்கும் அசௌகரியம் மாத்திரம் தான். அவர்கள் இறந்து போன தங்கள் சக எம். பி. க்கு சபையில் இரங்கல் தெரிவிக்கிறார்கள், இந்த போராட்டத்தில் இறந்த 10 பொது மக்கள் மற்றும் ஏற்கனவே தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை. ரம்புக்கன சமிந்த லக்ஷன் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடாத்தி கொல்லப்பட்ட போது அவர்கள் ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. சாமானிய மக்கள் மீது அவர்களுக்கு அனுதாபம் என்பது அறவே இல்லை.

ராஜபக்ச பயங்கரவாதிகள் நூற்றுக் கணக்கான சொத்துக்கள் வீடுகளை அழித்த விதம் ... 

ராஜபக்ஷக்கள் தமது ஆட்சி காலத்தில் அதன் அரசியல் எதிரிகளைக் கொன்று குவித்ததுடன் ஆயிரக் கணக்கான வீடுகளையும் சொத்துக்களையும் அழித்தனர். லங்கா ஈ நியூஸ், சிரச, சியத, உதயன் உள்ளிட்ட பல ஊடக நிறுவனங்களை தீயிட்டு அழித்தனர். இந்த நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குவது எவ்வாறு இருப்பினும் தாக்குதல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லை. 

ரங்கே பண்டார எதிர் கொண்ட ராஜபக்ச வன்முறை ... 

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார, தாம் எதிர்கொண்ட ராஜபக்ச பயங்கரவாதத்தை ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்து இருந்தார்.

" 04.10.2009 அன்று மாதம்பே, சிலாபத்தில் உள்ள எனது வீடும் ஆனமடுவ பகுதியில் உள்ள எனது அலுவலகமும் அரசியல் பயங்கரவாதிகளால் தீக்கு இரையாக்கப்பட்டது. அதற்குக் காரணமானவர்கள் ராஜபக்ஷவின் அடியாட்கள். சனத் நிஷாந்த உள்ளிட்ட குண்டர் கும்பலால் எனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. நானும் எனது பிள்ளைகளும் இதனால் பெரும் அவதிப்பட்டோம்.  செய்வது அறியாது தவித்தோம். எவ்வாறாயினும், அண்மையில் சபையில் பெரும் இன்னல்களை அனுபவித்ததாக கருத்து முன் வைத்து பேசியவர் அப்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ,. அரசியல் பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானம் அற்ற செயலை பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் பாராளுமன்றத்திற்கு விளக்க முற்பட்டேன்.  ஆனால் அதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. சமல் ராஜபக்சவால் உண்மை உலகம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக நேரடி ஒளிபரப்பு கூட நிறுத்தப்பட்டது. 

எவ்வாறாயினும், நான் எதிர் கொண்ட நிலைமையை நான் விளக்கிய போது சமல் ராஜபக்ஷ உச்ச சபாநாயகர் நாற்காலியில் இருந்தார். ஆனால் இன்று அவர் அந்த இருக்கையில் இல்லை. ஆனால் சமல் ராஜபக்ச ராஜபக்சக்களுக்கு ஏற்பட்ட மனக்குறைகளை நான் அப்போது இருந்த ஆசனத்தில் இருந்து சொல்ல வேண்டியதாயிற்று. அதுவும் விதியின் கேலிக் கூத்து.

02.11.2009 அன்று அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி நான் எனது குடும்ப உறுப்பினர்களுடன் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினேன். அப்போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷ என்னையும் எனது குடும்பத்தினரையும் முழு போலீஸ் பலத்துடன் மறைத்து விட்டு பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். கண்ணுக்குத் தெரியாத வகையில் எம்மை மறைத்து பாராளுமன்றத்திற்குள் செல்வதே அவரது நோக்கம் என்பது தெளிவாகின்றது. 

எவ்வாறாயினும், பாராளுமன்ற சிறப்பு உரிமைகளின் கீழும் கூட அவர் எனக்கு முறைப்பாடுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க சரியான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை. அதுதான் அவர்களின் ஜனநாயகம். 

ராஜபக்சக்களின் அரசியல் பயங்கரவாதத்திற்கு உள்ளான அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் ..!!

நாட்டில் 2005 முதல் 2015 வரையான காலப் பகுதியில் ராஜபக்ச அரசால் தீ வைத்து அழிக்கப்பட்டது தனது வீடு மட்டும் அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ அரசியல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“எமது நாட்டிலுள்ள குடியிருப்புகள் முதல் குடிசைகள் வரை அனைத்து குடியிருப்புகளும் மக்களுக்கு அடைக்கலம் தரும் செழுமையான, உன்னதமான வளங்கள் ஆகும். எங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை ராஜபக்சக்கள் உணரத் தவறி விட்டனர், அதை சமல் ராஜபக்ச போன்றவர்கள் உணர்ந்துள்ளனர். அந்த பெரிய மாளிகை தீப்பற்றி எரிந்த பின்னர் இந்த உணர்வு வந்துள்ளது. 

என் வீட்டையும் மற்ற வீடுகளையும் தீ இட்டுக் கொளுத்தியவர்களுக்கும், தீ வைக்க அறிவுறுத்தியவர்களுக்கும் இன்று 'திட்டா தம்ம வேத கர்ம' முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற கூற்றுக்கு அமைய பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று எனது வீட்டிற்கு தீ வைத்த சனத் நிஷாந்த மற்றும் ஜகத் சமந்தவின் கதி அப்படித்தான். இவர்களை ஆட்சியில் அமர்த்தியவர்களே அவர்களது வீடுகளுக்கு தீ வைத்து வீதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர். பல்வேறு விடயங்களைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்ட ராஜபக்சக்களுக்கு ஏற்பட்ட அதே கதி இன்று பதுங்கு குழிக்குள் சிக்கி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சமல் ராஜபக்ச போன்றவர்கள் பிறர் படும் துயரங்களை வெளிப்படையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது கண்ணீர் வடிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அன்றைக்கு பிறர் துன்பத்திற்காக இப்படி ஒரு உணர்ச்சி தோற்றம் தோன்றி இருந்தால் இன்று இப்படி குற்றம் சாட்டப்பட்டிருக்க மாட்டார்கள். இதுவே தித்தத்தின் தம்ம கர்மா." 

இலங்கை பொது ஜன குண்டர் கட்சி பெற்ற பின் விளைவு ... 

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டாரவின் கூற்றுப் படி, ஸ்ரீ லங்கா குண்டர் கட்சியின் அமைச்சர்கள் அவர்கள் விதைத்ததை அறுவடை செய்தனர். ஆனால் இன்னும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை. நான்கு நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் சந்திக்கும் நிலை குறித்து அவர்கள் கதறி அழுததுடன், எதிர்க் கட்சிகள் மீது குற்றம் சாட்டினர். ஆனால் அவர்கள் நெருக்கடி ஏற்பட தாங்கள் வழங்கிய பங்களிப்பை முற்றிலும் மூடி மறைக்கின்றனர். மாறாக ஜே வி பி யும் ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊடக நிறுவனங்களையும் எதிரிகளாக மாற்றி உள்ளனர். 

" இங்கே போனை தா கீழ் சாதிப் பயலே .. "

9 / 5 தாக்குதலின் பின்னர் பாராளுமன்றம் ஆரம்பமான முதல் நாளிலேயே, சிரச ஊடகவியலாளர்கள் மற்றும் பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் கசுன் சமரவீரவை நோக்கி, " உன் தொலைபேசியை இங்கே கொடு கீழ் சாதி நாயே... இதோ நாட்டில் நடப்பதை நீங்கள் மணிக்கு மணி  போட்டுக் காட்டியதால் எங்கள் வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.  இது ரிவியா.. நீங்கள் தான் எல்லாவற்றுக்கும் காரணம்... "  என்று மொட்டுக் கட்சி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு. டி. வீரசிங்க மிரட்டி கையடக்கத் தொலைபேசியை பறித்துள்ளார். அத்துடன் ஸ்வர்ண வாஹினியின் ஊடகவியலாளர் பிரகீத் பெரேராவின் கையடக்கத் தொலைபேசியையும் பறித்து தாக்க முயற்சி செய்துள்ளனர்.  கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொரலு இந்திக ஊடகவியலாளர் கசுனை சுவரில் தள்ளி தாக்குதலுக்கு முயற்சி செய்துள்ளார். இதற்கு ஆதரவாக அமைச்சர் சன்ன ஜயசுமணவும்  செயற்பட்டார். மூன்று எம்பிக்களும் உண்மை பேசுபவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி  மிரட்டினர். இந்தக் காட்சிகள் அனைத்தும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளிலும் பதிவாகி இருந்த போதிலும், பாராளுமன்ற சார்ஜென்ட் அட்-ஆர்ம்ஸ் படைக்கள சேவிதர் காட்சிகளை நீக்கி விட்டு இரண்டு கைத் தொலைபேசிகளையும் இரண்டு ஊடகவியலாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். 

பிணையில் உள்ள சனத் நிஷாந்த விஜித்த ஹேரத் மீது தாக்குதல் நடாத்த முயற்சி ... 

பிணையில் வெளியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஸ்ரீலங்கா குண்டர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஜே. வி. பி. மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முன் வந்த மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவு இருக்கும் போதையில், அரச அடக்கு முறையும், வன் முறையும், மிரட்டலும் சண்டித்தனத்தில் அடக்கி விடலாம் என்று இன்னும் நினைக்கிறார்கள். 

ஸ்ரீ லங்கா குண்டர்  கட்சியின் பிரதிநிதிகள் நீதிமன்றில் சவால் விடுத்துள்ளனர். 
9/5 தாக்குதலின் பின்னர், பாராளுமன்ற அமர்வுகளில் காணப்பட்ட மற்றும் ஒரு ஆபத்தான போக்கு, நீதித்துறை மீது ஸ்ரீ லங்கா குண்டர் கட்சியின் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட இழிவான தாக்குதல் ஆகும். பொலிஸாரின் அடிப்படை நீதிமன்ற பிணை முறிகளுக்கு ஸ்ரீ லங்கா குண்டர் கட்சியின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் நாட்டில் " பயங்கரவாதத்தை " பாதிக்கும் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். அநியாயமாக கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் இலவச பிரதிநிதித்துவம் அளித்ததையும் அவர்கள் விமர்சித்தனர். இது தெளிவாக நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அடியாகும். 

நீதித்துறை மீதான இந்த தாக்குதல் தற்செயல் நிகழ்வு அல்ல. பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கு எழுதியுள்ள சர்ச்சைக்குரிய கடிதத்தில், பாராளுமன்றத்தில் ஸ்ரீ லங்கா மொட்டு குண்டர் கட்சியின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே இது நீதித்துறையை அச்சுறுத்தும் வகையில் அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கை என்பது தெளிவாகிறது. 

பசில் ராஜபக்ஷவின் சவால் ... 

பசில் இராஜபக்ஷவோ அல்லது அவரது இலங்கையை தளமாகக் கொண்ட கட்சியோ வெகுஜன எதிர்ப்புக்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பாராளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருப்பதால் மக்கள் கருத்தை பொருட்படுத்தாமல் செயற்படலாம் என்ற ஆணவத்துடன் செயற்படுகின்றனர். பிரதி சபாநாயகர் தேர்தலில் தனது கட்சி சார்பில் அஜித் ராஜபக்ச என்ற குண்டர் கதாபாத்திரத்தை களமிறக்கி பசில் மீண்டும் உறுதிப்படுத்தினார். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஜனநாயகப் பண்புகள் 21ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக முன்வைக்கப்படும் என புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதி அளித்துள்ளார். ஆனால் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் வாக்குகளை பெற்றிருப்பது பசிலின் ஸ்ரீலங்கா குண்டர் கட்சிக்கே. ராஜபக்ச சர்வாதிகார வெறியை முடிவுக்குக் கொண்டு வரும் எந்தத் திருத்தமும் ஆதரிக்கப்படாது என்று பசிலும் அவரது தரப்பினரும் நம்புகின்றனர்.  

அரசியல் கைதி ரணில் !!

ரணில் இன்று பசில் மற்றும் அவரது கட்சியின் அரசியல் கைதி. ஜனாதிபதியின் வரம்பற்ற அதிகாரங்களை இல்லாதொழிக்கும் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அனுமதிக்காத பிரேரணைகளை கோத்தபாய மற்றும் பசிலின் தரப்பினர் ஏற்கனவே எதிர்த்துள்ளனர். அவர்களைக் கொண்டு ஜனநாயக சீர்திருத்தங்களைச் செய்ய முயல்வது ஆடு விழும் வரை துரத்துவது போன்ற வீண் செயலாகும். ஜனாதிபதி கோத்தபாயவுக்கோ அல்லது பசில் உட்பட பசிலின் கட்சிக்கோ ஜனநாயகத்தில் எந்த மதிப்பும் இல்லை. தனது நேர்மைக்காக அண்மையில் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்ட அரசியல் அயோக்கியன் அலி சப்ரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஸ்ரீலங்கா குண்டர் கட்சிக்கு முன்வைத்து “சுயேச்சையான ஆணைக்குழுக்களை சாப்பிட முடியுமா ? என்று கேட்டுள்ளார். 

நாட்டில் அரசியல், பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமுல்படுத்த வேண்டுமானால் முதலில் தேர்தலுக்குச் சென்று ராஜபக்சே குடும்ப அரசியலையும் பசிலின் இலங்கை அடிப்படைக் கட்சியையும் ஒன்றிணைத்து தோற்கடித்து இந்த நாட்டை ராஜபக்சே பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இன்று அதற்கு மேல் தீர்வு இல்லை.

- அனுபாவனந்த 

[email protected]

---------------------------
by     (2022-05-29 10:42:45)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links