~

ஹிருணிகாவுக்கு நடந்த கொடூரம்..! அரசியல் வாழ்க்கை அழிவில்!

(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.28, பி.ப.10.45) 2015 டிசம்பர் 21ஆம் திகதி தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞன் கறுப்பு டிஃபென்டர் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு, அநியாயமாக தடுத்து வைத்து அடைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக  குற்றஞ்சாட்டப்பட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இதற்கு உதவி செய்தமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகளுடன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நீண்ட விசாரணைக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர்,  டிஃபென்டர் வாகனம் ஹிருணிகாவினுடையது என்பதை உறுதிப்படுத்தி, ஹிருணிகா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேர் மீது 19 அதிக குற்றச்சாட்டுகளை சுமத்தினர். 8 பாதுகாவலர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அதனால் அபராதம் விதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட  சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஹிருணிகா குற்றத்தை ஒப்புக் கொள்ளாததால், அவருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக 18 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு 3 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு குற்றச்சாட்டிற்கு தலா 3 வருடங்கள் வீதம் 33 வருடங்கள் தண்டனை விதிக்க முடியுமான நிலை காணப்பட்டது. எனினும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 06 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, இளைஞன் ஒருவரை கடத்துவதற்கு சதி மற்றும் உதவிய குற்றத்திற்காக பிரதிவாதி குற்றவாளி  என நீதிபதி அமல் ரணராஜா திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.

ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிகளின் ஆதரவாளர்கள் 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்திருந்ததை, தண்டனைக்கு முன்னர் மனுதாரர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நினைவு கூர்ந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் செய்யும் குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப, அவருக்கு 69 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கும் திறன் நீதிமன்றத்துக்கு உள்ளது என்றார்.

பிரதிவாதி தனது பாராளுமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது அங்காடியில் பணிபுரியும் பிரஜை ஒருவரை கடத்திச் சென்று குடும்ப தகராறுகளைத் தீர்ப்பதற்கு வேலை செய்துள்ளார் என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத விடயமாகும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.  
இது மிகவும் பாரதூரமான விடயம் எனவும், இது குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைக்க வேண்டிய குற்றம் எனவும், தண்டனையை இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக மாற்றுவது பொருத்தமற்றது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர் தான் ஒரு குற்றத்தைச் செய்தார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் சமூகம் அதை அறிந்திருக்க வேண்டும் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் அறிவித்தார்.
மேலும், இந்த பிரதிவாதி பயணித்த பாதையில் பயணிக்க யாராவது தயாராக இருந்தால், சட்டரீதியாக வாழ்பவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த தண்டனையை இந்த பிரதிவாதிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர் கோரினார்.

குற்றம் சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயதுடைய மூன்று சிறிய பிள்ளைகள் இருப்பதாகவும், அவர் சிறையில் அடைக்கப்பட்டால், அந்த பிள்ளைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, பிரதிவாதியை சிறையில் அடைக்காமல், அவருக்கு தண்டனை வழங்குமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.

அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, இந்த முடிவை அறிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு எதிராக தரப்பினர் மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மத்தேகொட நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர, வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் உள்ள பொது வார்டில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் பெண் கைதிக்கு விதிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்ததாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்

---------------------------
by     (2024-07-02 18:37:04)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links