~

ராவய நிறுவனத்தை விற்கச் சென்று நீதிமன்றில் மூக்குடைப்பட்ட விக்டர் ஐவன்!

(லங்கா ஈ நியூஸ்- ஜுலை 05. 2024, பி.ப 04.00) ராவய பத்திரிகை நிறுவனத்தை விற்பனை செய்யவோ, இடமாற்றம் செய்யவோ, வாடகை அல்லது குத்தகைக்கு விடவோ, இடிக்கவோ, அதன் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றவோ, செய்தித்தாள் வெளியிடவோ கூடாது என கட்டாய தடை அறிவிப்புடன் பல தடை உத்தரவுகளை கல்கிஸ்ஸ நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

13 மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கல்கிஸ்ஸ மாவட்ட நீதிபதி எம்.எஸ்.கொடிதுவுக்கு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.  

ராவயவுக்கு உழைத்துக் கொடுத்த 479 பேர் கொண்ட குழுவுக்குத் தெரிவிக்காமல், நிறுவனத் தலைவர் விக்டர் ஐவன் தனது மருமகன் மற்றும் மைத்துனரை பணிப்பாளர் குழுவில் சேர்த்து, நிறுவனத்தை விற்பனை செய்ய ரகசியமாகத் திட்டமிட்டார் என்பது வழக்கின் விவாதங்களில் முன்வைக்கப்பட்டது. பொது பணத்தில் கட்டப்பட்ட ராவய நிறுவன சொத்துக்களை விற்று பணம் பெறும் செயல்முறையை நிறுத்துமாறு மனுதாரர்கள் கோரினர்.

அதனை நிரூபிக்கும் வகையில், ராவய பத்திரிகை அலுவலகம் மற்றும் அலுவலகம் பூட்டப்பட்டதுடன், பத்திரிக்கை அலுவலகம் "விற்பனைக்கு" என காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளும் முறைப்பாடுடன் முன்வைக்கப்பட்டன.

பணத்தை முதலீடு செய்தவர்களுக்காக பத்திரிகையை தொடர்ந்து நடத்துவதற்கு ஒப்புக்கொண்ட நம்பிக்கையை விக்டர் ஐவன் வேண்டுமென்றே புறக்கணித்ததன் மூலம் சொத்துக்களை விற்க எந்த காரணமும் இல்லை என்றும் ராவய பத்திரிகை ஒரு போதும் நட்டத்தை சந்திக்கவில்லை என்றும், அதன் அடிப்படையில் நடத்தப்பட்டது என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மேற்கூறிய அனைத்து உண்மைகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விவாதங்களை கருத்திற்கொண்டு,   ராவய தலைவர் விக்டர் ஐவன் மற்றும் பணிப்பாளர் சபையின் இந்த தன்னிச்சையான செயல்களுக்கு தடை உத்தரவு மற்றும் கட்டாய தடை உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும், விக்டர் ஐவன் தனது குடும்பத்தினரையும் மேலும் சிலரையும் இணைத்து ராவய சொத்தை விற்று தனிப்பட்ட ரீதியில் கையகப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு மேற்கொண்டார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த வழக்கில் பணிப்பாளர் சபைக்கு மேலதிகமாக ராவய ஆசிரியர் விமலநாத் வீரரத்னவுக்கும் 7வது பிரதிவாதியாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் சுதர்மா கே. கமகேயின் ஆலோசனையின் பேரில் சட்டத்தரணி மனோஜ் சஞ்சீவ ஆஜரானார்.

---------------------------
by     (2024-07-05 15:32:15)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links